Tuesday, December 29, 2009

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாடு மற்றும், கருணாநிதியின் செம்மொழி மாநாடு ஆகியவற்றை நான் புறக்கணிக்கிறேன்-பேராசிரியர் இராமசாமி

உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு ஏற்பாட்டுக்குழுவினரோடு பேராசிரியர் இராமசாமி மற்றும் அவரின் அந்தரங்க செயலாளர் ஜெயபாலன்

டாக்டர் கிருஷ்ணசாமி பேராசிரியர் இராமசமியிடம் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழை வழங்குகிறார்
ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும், கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஆவரின் அறிக்கை கீழ்காணுமாறு :-

இந்தியாவில் நடக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடான பரவசி மாநாட்டிற்கு பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பானது, ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் தங்குதல் மற்றும் சிறப்பு வகுப்பு விமான டிக்கெட் ஆகிய செலவுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இந்த மாநாட்டை பேராசிரியர் இராமசாமி புறக்கணிக்கிறார். அதற்கான காரணத்தை அவர் விவரிக்கையில் கூறியது :-

"தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டார்கள். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.

அதேப்போல தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர். கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை. பக்கத்து தேசத்தில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?

கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் அதேவேளை தமிழகத்தின் கோவையில் இனமானமுள்ள தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்கிறேன். மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையை புலப்படுத்த வேண்டும். மலேசிய தமிழர்களான நாம், ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்கு கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தையும் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது. நன்றி."

Tuesday, December 15, 2009

Malaysian Government should hold an emergency Parliament session to discuss the “killing of Tamils in Sri Lanka" - Prof Ramasamy


(The Star - Tuesday November 24, 2009.) The Sri Lankan refugee situation resulted in heated exchange in the Dewan Rakyat yesterday, with an Opposition MP telling Deputy Foreign Minister Senator A. Kohilan Pillai at one stage to go “hang himself.”

Kohilan had just said the Malaysian Government had provided US$100,000 (RM338,000) to the Sri Lankan government to finance humanitarian efforts for the refugees when N. Gobalakrishnan (PKR – Padang Serai) accused him of being a Sri Lankan agent.
“This is a humiliation for the Tamil people. It’s better that you hang yourself,” he shouted at Kohilan.

Earlier, in reply to a question from Prof Dr P. Ramasamy (DAP – Batu Kawan), Kohilan had said Malaysia considered the conflict between the Sri Lankan government and the Tamil Tigers an internal matter.

He said the Sri Lanka government had cooperated with the United Nations in the resettlement of refugees from the Tamil minority group.

“The UN Secretary-General Ban Ki-moon had visited Sri Lanka on May 23 to check to see if Sri Lanka had adhered to international treaties in the handling of refugees.

“His special envoy also visited the island state in a follow-up and submitted a report that the refugee situation was generally satisfactory.

“However, the return of the refugees had to be delayed for safety reasons because many land-mines had to be cleared first.”

When Dr Ramasamy asked the Government to hold an emergency Parliament session to discuss the “killing of Tamils in Sri Lanka,” Kohilan replied the matter was being handled by the Sri Lankan government, adding that a total of 78,000 refugees had been resettled to-date.

Opposition Leader Datuk Seri Anwar Ibrahim (PKR – Permatang Pauh) interjected:
“I was in Colombo recently. There is no seriousness on their government’s side to resolve the refugee issue.”

Kohilan accused Anwar of trying to be a hero to the Tamil community:
“I was also there. I’m shocked because what you said in Colombo is contradictory to what you are saying in Malaysia.”

Anwar took offence to Kohilan’s remark but Kohilan replied he would not retract his statement.
Gobalakrishnan told reporters in the Parliament lobby later he got upset because Kohilan’s statement on the Sri Lankan refugees was not in line with the views of most Malaysians.
At a separate press conference, Kohilan said Malaysia practised a policy of non-interference.

“Sri Lanka’s issue is an internal matter, unlike the Palestine-Israel conflict which is between two countries.”

Saying Gobalakrishnan’s call for him to “hang himself” was uncalled for, he added that Anwar had met Sri Lankan opposition leaders when there.
“The ruling government represents about 80% of the country, so when he listens to the minority, he might not get the right idea,” Kohilan said. TheStar

Concern over maximum 10 subjects for SPM - The Sun

GEORGE TOWN (Nov 29, 2009): Concerns have been raised that the federal government’s imposition of a maximum 10 subjects for SPM candidates would harm the future of Tamil and Chinese literature.

Deputy Chief Minister (II) Prof Dr P. Ramasamy said the policy should be amended to allow 12 subjects, so that those who wished to sit for Chinese or Tamil could do so without affecting the needs of their academic streams.

“The federal government decision to impose this limit will have far-reaching consequences,” Ramasamy told a press conference today.

Present was Penang’s Tamil Schools Sub-Committee chairman Dr K. Anbalakan, a history lecturer at Universiti Sains Malaysia (USM).

Deputy Prime Minister and Education Minister Tan Sri Muhyiddin Yassin had announced in June the six “core” or compulsory subjects for SPM as Bahasa Melayu, English, Islamic Education or Moral Studies, History, Mathematics and Science.

The concern now was that a student would be forced to choose non-literature subjects for the remaining four options.

As an example, Ramasamy said, a science student would be forced to take Biology, Chemistry, Physics and Additional Mathematics, making it impossible for him to sit for Tamil or Chinese literature.

A commerce student would similarly be pressured to take accounts, commerce, economics and geography.

“If this goes ahead , it will be the death of Tamil and Tamil literature in our national schools,” he said.

“With students not being able to take Tamil as a subject, our Tamil schools will have a problem getting qualified teachers in the future,” he said.

All teachers in Tamil schools are required to have passed Tamil as an SPM subject.Ramasamy, who is also the Batu Kawan MP, said he was planning to propose an emergency resolution in Parliament against the current maximum number of subjects for SPM. theSun

Thursday, September 17, 2009

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - உரை

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - வாழ்த்துரை

உலக தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதை அறிகின்றேன். உலக தமிழர்களின் ஒற்றுமையை நாம் மாநாடு கூட்டி பேசுகின்றோம், தினம் பத்திரிகை அறிக்கைககளில் படிக்கின்றோம், பல்வேறு சமயங்களில் உலக தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம், கருணாநிதி பேசுகிறார், ஜெயலலிதா பேசுகிறார், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் பேசுகின்றனர், மலேசியாவில் உள்ள தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் உலக தமிழர்களிடத்தில் உண்மையில் ஒற்றுமை நிலவுகின்றதா என்பதுதான் தற்போதைய கேள்வி. அந்த கேள்விக்கான பதிலும் நாம் அறிந்த கசப்பான உண்மைதான். உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவவில்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவாததற்கு காரணம், சரியான தலைமைத்துவம் இல்லாததே ஆகும். தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம் சரியான தலைமைத்துவம் இல்லாமையே ஆகும். உலக தமிழர்களுக்கு இந்த தலைமைத்துவ இல்லாமை மிகப்பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்கள் தத்தம் அரசியல் வேறுபாடுகளை முன்னிறுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளால் தமிழக தமிழர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். உலகளாவிய தமிழர்களின் பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளும் இந்த வேற்றுமைக்கு வழி வகித்து விட்டிருந்தது. ஒரு தூரநோக்கமுள்ள, அரசியல், சமூகவியல், பொருளாதார சித்தாந்தம் கொண்ட ஒரு தலைவர் இல்லாததால்தான் தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு முழுமுதற் காரணம் எனலாம். தமிழர்களின் ஒற்றுமையை புலப்படுத்தும் வண்ணம் மிக அண்மையில் நாம் ஒன்று பட்டது தமிழீழ விடயத்தில்தான். ஒற்றுமைக்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்துக்கிடந்தோம். ஆகமொத்தத்தில் தமிழர்கள் ஒன்றுபடுவது என்பது குறிஞ்சி மலரை விட அபூர்வமான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.


தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களின் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை விவகாரம் தலையோங்கியே உள்ளது. தமிழர்கள் மத்தியில் நிலவும் வேற்றுமைகளுக்கு
பல்வேறு

காரணங்கள் உள்ளன. அடிப்படையில் நமக்குள் இருக்கும் சரித்திர வேற்றுமைகள், அரசியல் வேற்றுமைகள், மற்றும் சமூக, பொருளாதார வேற்றுமைகளும் நமது தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாமல் செய்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகம் சரித்திரம் அனைத்தையும் கடந்து நாம் ஒன்று பட்டது தமிழ் ஈழத்திற்கான உரிமை போராட்டத்தில்தான். தமிழ் ஈழத்தின் சுதந்திரத்தையும், தமிழ் இனத்தின் மாண்பையும் முன்னிறுத்தி நடந்த தமிழீழ போராட்ட களம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், போர் இறுதிக்கட்டத்தை அடைந்த கடந்த ஓராண்டில்தான் நமது குரல் மிக திண்ணமாக ஒலித்தது எனலாம். இருப்பினும், அதற்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்திருந்தோம் என்பதை மறுக்க இயலாது. புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஈழத்து சகோதரர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்த பொழுது, தாய்த் தமிழகத்தில் அரசியல் குடுமிப்பிடி சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன. அரசியல் கூட்டணிகளை முன்னிறுத்தியே தமிழகத்தின் தலைவர்களின் அசைவுகள் இருந்தன. ஈழத்தில் செத்து மடியும் தமிழனையும் மிஞ்சி நமக்கு தேவை ஆட்சிக்கைட்டில்தான் என்ற வாக்கில் நடந்துக்கொண்டனர் சில தமிழ் தலைவர்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்கு நிலவி வந்த அரசியல் வேற்றுமைகளை மறந்து தமிழீழம் மலர ஒன்று பட்டிருந்தால் ஈழப்போர் கசப்பான முடிவை எட்டியிருந்திருக்காது. தமிழினத்தின் மாண்பு ஒன்றே தன் நோக்கம் என்று போராடிய அந்த மாவிரனின் தலைமைத்துவத்திலும் கூட நம் தமிழர்கள் ஒன்று படாமால் பிரிந்துக்கிடந்தனர் என்பது வருந்தத்தக்க உண்மை. தமிழ் இனத்தின் அடிப்படை பலவீனமே துரோகத்தில் அடங்கி போய் விட்டதால்தான் ஈழப்போர் கசப்பான ஓர் இடைவெளியை எட்டியுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் புதிதான ஒன்றல்ல, கட்டபொம்மனை காட்டி கொடுத்ததும் எட்டப்பன் என்ற ஒரு தமிழன்தான்; பிராபாகரனை காட்டிக்கொடுத்தும் தமிழர்கள்தாம். துரோகத்தை தமிழினம் வெல்லும் நாளில்தான் தமிழினம் ஒன்று பட முடியும்.

வருங்காலத்தில் தமிழினத்தின் ஒற்றுமைக்கு அடிப்படையாக அமையப்போவதும் ஈழப்போராக அமையும் பச்சத்தில் தமிழர்கள் தங்களிடேயே நிலவும் சின்ன, சின்ன வேற்றுமைகளைக் கூட புறந்தள்ளிவிட்டு ஒரே குரலில் ஈழத்தின் விடுதலையை வென்றெடுக்க வேண்டும். மலேசியாவிலும் ஈழத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட நிலைகளில் தமிழர்கள் ஒன்றிணைந்தனர் என்பது இங்கெ குறிப்பிடத்தக்கது.

மலேசியா தமிழர்கள் என்று பார்க்கையில், கடந்த 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள், தங்களின் கலாசார, பாரம்பரிய பின்னணிகளோடு இங்கேயே தங்கி விட்டிருந்தனர். இந்த நாட்டின் வளர்ச்சியில் அபரிதமான பங்காற்றி, நாட்டின் மிகப்பெரிய இனமாகவும் தமிழர்கள் இருந்து வந்துள்ளனர். மலேசியாவை பொறுத்தவரை தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் பின்தள்ளப்பட்டனர். தமிழர்களின் ஒற்றுமையை பல்வேறு நிலைகளிலும் இந்த நாடு கண்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் இருந்த பொழுது கூட தமிழர்களின் எழுச்சி பல்வேறு கட்டங்களை தாண்டி வந்துள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையை ஒரு கண்ணாடி கோட்டையோடு ஒப்பிடலாம். ஒரு சிறு கல் பட்டாலும் கண்ணாடி கோட்டை சிதறி விடுவதைப்போல் மலேசிய தமிழர்களின் ஒற்றுமையும் கடந்த பல ஆண்டுகளில் சிறு, சிறு விடயங்களுக்கவேல்லாம் சிதறியுள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையின்மையை ஒரு குறிப்பிட்ட தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்நாட்டில் ஏகபோக கோலேச்சி வந்தது. தமிழர்களின் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களின் உரிமைகள் மிக எளிதில் ஏப்பம் விடப்பட்டன. உரிமைகளை இழந்த தமிழினத்தின் முதுகில் ஏறி காலத்திற்கும் குதிரை சவாரி செய்யலாம் என்றிருந்த ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் மனக்கோட்டையை நவம்பர் 25 பேரணியின் மூலம் உடைத்தெறிந்தனர் மலேசிய தமிழர்கள். அந்த ஒற்றுமையாவது நீடித்ததா என்றால், கடந்த ஓராண்டில் நம் சந்தித்த பிளவுகள் எத்தனை. 7 சதவீத தமிழர்களுக்கு இந்த நாட்டின் எட்டு கட்சிகள். நமது இனத்தின் தலையெழுத்து எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை. ஒற்றுமை என்பதை அடைய நமக்கு ஏன் இத்தனை கடினம்? கடினத்திற்கு காரணம்தான் என்ன?

தமிழீழத்தில் இன்றும் எண்ணற்ற சகோதரர்கள் சொல்ல முடியாத வேதனைகளில் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர். பிரபாகரன் என்ற அந்த மாபெரும் தலைவன், ஒற்றுமையை வற்புறுத்தி தமிழர்களை ஏற்றுக்கொள்ள செய்தார். அந்த ஒற்றுமை இருந்த வரை தமிழர் படை எண்ணற்ற வெற்றிகளை குவித்தது. துரோகம் தலைத்துக்கியதால், ஒற்றுமையும் சிதைந்து, போர் கசப்பான கட்டத்தை எட்டி விட்டது. ஆனால் அது முடிவு அல்ல. தமிழர் ஒற்றுமையாக இருந்து ஈழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வரும்பொழுது எந்தவொரு பிணக்கமும் இல்லாமல் ஒன்றிணைத்து நமது ஈழத்து சகோதரர்களின் இன்னலை தீர்ப்போம்.

பேராசிரியர் இராமசாமி,

பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

Thursday, September 3, 2009

புலியைப் பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை!!

பினாங்கு, கம்போங் புவா பாலா, வீடுகள் உடைப்பட்டப்போது இராமசாமி எங்கே போய்விட்டார் என்று நேற்று பத்திரிகைகளில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். பினாங்கின் புலி என்று பேராசிரியர் கூறிக்கொள்கிறார் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஒரு திருத்தம், நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், பேராசிரியர் புலிதான்; அவர் பினாங்கில் மட்டும் புலியல்ல, மலேசியாவிற்கே புலிதான். அவர் காகித புலியல்ல; காரிய புலி!! இன்று புவா பாலா கிராம மக்களுக்கு, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்புள்ளஇரட்டை மாடி வீடுகள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே இழப்பீடாக கிடைக்கின்றது என்றால் அதற்கு காரணம் பேராசிரியர் இராமசாமிதான். எத்தனையோ இந்தியர் பெரும்பான்மை கிராமங்கள் மேம்பாட்டுக்காக எடுத்தக்கொள்ளப்பட்ட பொழுது, வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியவர்கள் யாரென்று ஆதாரத்தோடு எங்களால் நிருபிக்க முடியும். அப்படி நாங்கள் நிருபிக்கையில் தெரியும், 30 வருடங்களாக யார் வெற்று வாக்குறுதிகளின் வேந்தனாக இருந்தது, காகித புலியாக பறந்தது என்று.

தானேத் தலைவன், தானைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த ஓரு
மனிதருக்கு அடுத்து, இப்பொழுது இந்தியர்களின் நம்பிக்கை நட்சித்தரமாக பேராசிரியர் உருவாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலம்புகிறார்கள் இந்த அடிவருடிகள்.

கம்போங் புவா பாலா பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல அறிக்கை விடுத்திருக்கும் மோகன், மலிவான விளம்பரம் தேடி அலைகின்றார் என்பது அவரின் அண்மைய
நடவடிக்கைகளுக்கும், அறிக்கைகளுமே புலப்படுத்துகின்றன. பினாங்கு மாநில அரசு தலையிட்டதால், கம்போங் புவா பாலா பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணும் நிலை ஏற்பட்டது; தலையும் தெரியாமல், வாலும் தெரியமால் கம்போங் புவா பாலா விவகாரத்தில் மூக்கை நுழைத்து, அனைவரையும் குழப்பி மலிவு விளம்பரம் தேடியது இந்த மோகனும், அவரின் நண்பர்களும்தான். மலேசியாவில் எங்காவது, நிலம் பறிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகள் இழப்பீடாக தரப்பட்டுள்ளதா? தங்களது குடியிருப்பை மாற்றி செல்வதற்கு 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு முன்பு எத்தனையோ நில திட்டங்களுக்கு பல கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, எத்தனையோ இந்திய குடும்பங்கள் இது போன்ற திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; எப்பொழுதாவது மஇகாவோ அதன் தலைவரோ இதுப்போன்ற ஒரு இழப்பிட்டை பெற்றுத் தந்துள்ளனரா? கம்போங் புவா பாலா மக்களுக்கு, அவர்கள் வாழ்ந்த நிலத்திலேயே, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்பில், இரட்டை மாடி வீடுகள் கட்டித்தருவதற்கு மேம்பாட்டு நிறுவனத்தை ஒப்புதல் தர செய்தவர் பேராசிரியர் இராமசாமிதான்; சாமிவேலுவோ, இந்த மோகனோ அல்ல. கிராமத்தை விட்டு வெளியேறும் அம்மக்களுக்கு, 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகையாக மேம்பாட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்து, வாங்கி தந்தவரும் பேராசிரியர்தான்; இப்பொழுதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த 12 குடும்பங்களுக்கு மாத வாடகை பெற்று தருவதற்கு தொடர் முயற்சிகள் எடுத்து வருவதும் பேராசிரியர் அவர்கள்தான். கம்போங் புவா பாலா விவகாரத்தில் அனைத்தும் தெரிந்தவர் போல் முக்கை நுழைத்து குழப்பம் ஏற்படுத்தியதுதான் மோகனின் சாதனை; அந்த குழப்பத்தின் வழி, மலிவான விளம்பரம் தேடுவதுதான் மோகன் போன்றவர்களின் வாடிக்கை என்று அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தால் புரிகிறது.
நேற்று கம்போங் புவா பாலா கிராமத்தில் வீடுகள் உடைபடும்போது பேராசிரியர் இராமசாமி அங்கு வரவில்லை; அவர் கைப்பேசியை அடைத்து விட்டார் என்றெல்லாம் பிதற்றியிருக்கிறார் மோகன். நேற்று உடைக்கப்பட்டது மேம்பாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் வீடுகள். அவர்கள், தாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என்று தாமாகவே மேம்பாட்டு நிறுவனத்தினரிடம் சாவியை, ஒப்புதலை வழங்கி விட்டனர். அந்த குடியிருப்பாளர்களின் வீட்டை உடைக்க மேம்பாட்டாளர் உள்ளே சென்றார்; அப்பொழுது கிராமவாசிகளே அந்த மேம்பாட்டு நிறுவனத்தினரை உள்ளே அனுமதித்து விட்டபிறகும், தேவையில்லாமல் அங்கே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது மோகனின் கூட்ட்டத்தினர்தான் என்பதை நேரில் கண்டவர்களே சொல்கிறார்கள். மேலும் மோகன், நேற்று காலை பேராசிரியர் தனது கைப்பேசியை அடைத்து விட்டார் என்று மோகன் கூறியிருப்பது பச்சை பொய், இந்த ஒரு பொய்யே மோகனின் கற்பனை வளத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் பேராசிரியர் அவர்களின் கைப்பேசி இயக்க நிலையிலேயே இருக்கும். தான் மலிவு விளம்பரம் தேட வேண்டும் என்பதற்கு, மற்றவர்கள் பற்றி பொய்களை கூறுவதை மோகன் நிறுத்திக் கொள்வது நல்லது.

நேற்று கம்போங் புவா பாலாவில் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நிகழ்ந்திருக்காது, தேவையில்லாமல் அங்கே குழப்ப நிலையை ஏற்படுத்தி ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது மோகனின் படையினர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. அங்கே வந்திருந்த பத்திரிகை நிருபர்களையும் உள்ளே விடாமால் தடுத்து, போலீசாரோடு மோதியது எல்லாமே யார் என்பது எங்களுக்கும் தெரியும். சாலையில் படுத்துக்கொண்டு எங்கள் வீடுகளை உடைக்காதே என்று கேலிக்கூத்து நடத்தியது ஒன்றும் கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் அல்ல; அவர்கள் யார் என்பதை நான் சொல்லித்தான் மோகனுக்கு தெரிய வேண்டுமா? வேண்டுமென்றால் அங்கு குழுமியிருந்த பத்திரிகை நண்பர்களை கேட்டு பார்க்கலாம்.
பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டுவது என்பதை நிருபிக்கும் வண்ணமாக உள்ளது மோகன் தலைமையிலான மஇகா இளையோரின் நடவடிக்கை. கம்போங் புவா பாலா நிலத்தை விற்று அந்த மக்களை நட்டாற்றில் விட்டது மஇகா பங்கு வகித்த முன்னாள் தேசிய முன்னணி அரசுதான். அப்பொழுது ஆட்சிக்குழுவில் அமர்த்திருந்த டத்தோ சுப்பையாவை முதலில் கேள்வி கேளுங்கள்; இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த நில விற்பனையை தடுக்க முயற்சிக்கவில்லை? அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று பாசமழை பொழிவதால், மக்கள் உங்கள் மலிவு விளம்பர நாடகத்தை நம்ப மாட்டார்கள். நேற்று முன்தினம் கம்போங் புவா பாலாவில், மக்களுக்கு ஆதரவாக 200 பேரை அழைத்து வந்ததாக கூறியுள்ளார். அவர் அழைத்து வந்தவர்கள், ஆதரவளிப்பதர்க்கா? அல்லது எதற்கு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
மக்கள் கூட்டணி தலைவர்களை பற்றி ஏதேதோ வாய்க்கு வந்ததையெல்லாம் கூறியிருக்கும் மோகன் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை மக்கள் அறிவார்கள். பதில் கூற வேண்டிய கேள்விகள் எத்தனையோ உள்ளன, முதலில் அதற்கு பதில் கூறுங்கள், பிறகு எங்கள் மக்கள் கூட்டணி தலைவர்களைப் பற்றி பேசலாம். எங்கள் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளின் அரசியல், கொள்கையை அடிப்படையாக கொண்டது; கொள்ளையையும், பணத்தையும் அடிப்படையாக கொண்ட அரசியல் யார் அரசியல் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஏழை சமுதாயத்தின் வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்த பணத்திற்கு முதலில் பதில் கூறுங்கள் பிறகு கேள்விகள் கேட்கலாம். புலியை பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை.

Thursday, August 27, 2009

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!
28-08-2009
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை கொலைவெறி சிங்கள இராணுவம் மனிதாபிமானமே இல்லாமல் சுட்டுக்கொல்லும் படக்காட்சிகள் இப்பொழுது வெளிவந்துள்ள. பல வருடங்களாக இலங்கையில் இந்த அட்டூழியங்கள் நடந்து வருகின்றது என்று கூக்குரலிட்டு கூறி வந்தனர் ஈழத்தமிழர்களின் மீது பரிதாபப்பட்டவர்கள்; தமிழர்களை இன அழிப்பிலிருந்து காக்கவே நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் என்று வலியுறுத்தி புலிகள் கூறிய பொழுதும், உலக நாடுகளோ, தலைவர்களோ அதனை சட்டைக்கூட செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு கேடயமாக இருந்து அவர்களை காத்து வந்த புலிகளின் இராணுவ பலம் மழுங்கடிக்கப்பட்டப்பிறகு, சிங்கள வெறியர்கள் தங்களின் இன அழிப்பு அட்டூழியங்களை மீண்டும் விருப்பம் போல் மேற்கொள்கின்றனர். தமிழர்களின் காவல் அரணை தகர்த்து விட்டதால் இனி தமிழர்கள் சிங்களவர்களின் அடிமைகள் என்ற போக்கில்தான் செயல்படும் சிங்கள இனவெறி அரசும், இராணுவமும்.

தற்பொழுது மிக பரப்பரப்பாக பேசப்படும் இந்த படக்காட்சிகளைக்கண்டு, மலேசிய தமிழர்கள் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் ஈழத்து உடன்பிறப்புகளை எண்ணி மனம் வெதும்புகின்றனர். இந்த படக்காட்சிகள் வெட்ட வெளிச்சமாக்கியது, சிங்கள இராணுவ அட்டூழியத்தின் ஒரு பகுதி மட்டும்தான். போரால் பாதிக்கப்பட்டு, இன்று முள்வேலிக்குள் அகதிகள் என்ற பெயரில் சிறைக்கைதிகளாக வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. பசியாலும், பட்டினியாலும் படாதப்பாடுப் படுகின்றனர் அந்த தமிழர்கள். தமிழர்களுக்கெதிராக பல்வேறு வகை கொடுர செயல்கள் அகதிகள் முகாம் என்ற அந்த முள்வேலி சிறைக்குள் நிகழ்த்தப்படுகின்றன. பசியை தமிழர்களுக்கெதிரான வதை ஆயுதமாக சிங்கள இனவெறி அரசு பயன்படுத்துகிறது. அகதிகள் முகாமென்ற அந்த முள்வேலி சிறைக்குள் தமிழீழத்தின் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனர். பிச்சைக்காரர்களே இல்லாத சமூகமாக ஈழத்தமிழர்களை வைத்திருந்தார் பிரபாகரன், அவர்கள் இன்று ஒரு வேலை உணவுக்குக் கூட கையேந்தி நிற்கும் சமூகமாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். வாய்க்கிழிய மனிதாபிமானம் பேசும் உலக நாடுகளின் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டும் பாராமுகமாக இருப்பது ஏனோ? ஈழத்தில் மடிந்துக்கொண்டிருப்பது மனித இனம் அன்றோ?

ஏறக்குறைய 20 நாடுகளின் ஆதரவோடு புலிகளுக்கு எதிராக போரை முன்னெடுத்தது இலங்கை. புலிகளை வெல்கிறோம் என்றுக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாவதை தடுக்க, தங்களது ஆயுதங்களை மௌனப்படுத்தி, அஹிம்சை வழியில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய புலிகளின் தலைமை செயலர் பத்மநாபனையும் அனைத்துலக சட்ட விதிகளை மதிக்காமல் கடத்தியுள்ளது இலங்கை. நாடுக்கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முழுமுச்சாக பணியாற்றுகிறது இலங்கை இனவெறி அரசு. தமிழர்களின் குரலை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது இலங்கை. அமைதியான வழியில், தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய பத்மநாபன் மலேசிய தலைநகர், கோலாலம்பூர்ரில் வைத்துதான் கடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. பத்மநாபன் கைது தொடர்பாக மலேசியாவின் நெடுநீண்ட மௌனம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையா என்ற சந்தேகத்தை வலுக்க வைக்கின்றது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் எந்தவொரு நாட்டிலும் இதுப்போன்றதொரு அடிப்படை மனித உரிமையை மீறிய கடத்தல் சம்பவம் அனுமதிக்கப்படாது. பத்மநாபனை கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவியிருக்குமானால், அந்த சம்பவம் மலேசியாவில் வாழும் தமிழர்களை மதிக்காத செயலாகும். மலேசிய அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கும் முயற்சிகளை ஆதரித்து, அந்த தமிழர்களுக்கு உபத்திரவத்தை தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பக்காலம் தொடங்கி இலங்கையில் நடக்கும் மனித பேரவலங்களை தடுக்கக்கோரி மலேசியத்தமிழ்ர்களான நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலேசியத்தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக கண்டனக்கூட்டங்கள் வாயிலாகவும், பேரணிகள் வாயிலாகவும் தெரிவித்தோம். மலேசிய அமைச்சரைவையில் அமர்ந்துள்ள மஇகா அமைச்சர் இந்த விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்புவதாக உறுதியளித்திருந்தார். அப்படி இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் எழுப்பினாறேனில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதையும் அவர் அறிவிக்க வேண்டும். போஸ்னியா, கொசோவோ, சூடான் என உலகின் பல கண்டங்களிலும் நடக்கும் மனிதப்பேரவல விவகாரங்களில் முனைப்புடன் குரல் எழுப்பும் மலேசியா, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை ஒருமுறைக்கூட கண்டிக்காததன் மர்மம் என்ன? இலங்கை அரசின் இனவெறிப் போக்குக்கு மலேசிய அரசும் உடன்போகிறதா என்பதை உடனடியாக விளக்க வேண்டும்.


இலங்கையில் காலங்காலமாக தமிழர்கள் மிக மோசமாக நடத்துப்பட்டுதான் வந்துள்ளனர். ஜெயவர்த்தனே காலம் தொட்டு, இன்றைய மகிந்த இராஜபக்சே ஆட்சி வரை தமிழ் மக்களை சிங்களர்கள் இலங்கையின் குடிகளாக ஏற்றுக்கொண்டது கிடையாது. தங்களது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். ஈழ தமிழர்களின் இன்னலை நீக்கவே பல்வேறான போராளிக் குழுக்கள் இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் தோன்றின. கால ஓட்டத்தில் பல போராளிக்குழுக்கள் தங்களின் சுயநலனுக்காக கொள்கையை கைவிட்டு சிங்கள அரசுகளுடன் கைக்கோர்த்து பண சுகமும், பதவி சுகமும் கண்டன. ஈழத்தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இறுதிவரை போராடிய சுதந்திர அமைப்பை அழித்தொழிக்க உலகத்தின் பல்வேறு ஆதிக்க சக்திகளும் இனவெறி சிங்கள அரசுக்கு துணைபோயின.அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் வல்லரசுகளான இந்தியாவும்,சீனாவும் தெற்காசியாவில் தங்களின் இராணுவ பலத்தை பெருக்க போட்டிப்போட்டுக் கொண்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வாரி,வாரி வழங்கின. ஈழத்தமிழர்களின் காவல் அரணாக நின்ற புலிகளை சாய்ப்பதில் இந்தியா காட்டிய முனைப்பை சற்றும் எதிர்க்காமல், உலக தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களுக்கு இருந்த ஒரேயொரு காவல் அரனையும் தகர்த்து விட்டு இன்று சிங்கள பேரினவாதிகள் நடத்தும் இன அழிப்பு வெறியாட்டத்தை கண்டும் காணமால் போலிருப்பது, இந்தியாவின் சரித்திரத்தில் இருளடைந்த பாகம் என்றே கூறவேண்டும். இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் சுமுக நிலை மீண்டு வருகிறது என்று மனசாட்சியே இல்லாமல் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மனிதப் பேரவல விவகாரத்தில், தமிழ்நாட்டு முதல்வரின் நிலைப்பாடும், இந்திய மத்திய அரசின் போக்கும், உலகத்தமிழர்களை கடும் வெறுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.


போர் ஓய்ந்து விட்டது என்று கூறிக்கொண்டே, தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை வதைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனவெறிப் போக்கை மலேசியா உட்பட, உலக நாடுகள் உடனடியாக கண்டிக்க வேண்டும். அகதிகள் முகாமென்ற முள்வேலி சிறைக்குள் அடைந்துக்கிடக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை ஏற்படுத்த உலக நாடுகளும், ஐநா போன்ற அனைத்துலக அமைப்புகளும் முயற்சிகளை காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டும். மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் இனவெறி ஆட்டத்திற்கு எதிராகவும், பத்மநாபன் கடத்தல் சம்பந்தமாகவும் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் இந்த விவகாரத்தை நான் எழுப்புவேன். நன்றி.


பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

Monday, August 10, 2009

வேதமூர்த்தி அவர்களே, எதுவாக இருந்தாலும் மலேசியாவிற்கு வந்து பேசுங்கள்.

அண்மைய காலமாக தனது அறிக்கைகளின் வழி, தொடர்ந்து மக்கள் கூட்டணியை வசைப்பாடி வரும் வேதமூர்த்தி, அவரது கருத்துகளை இந்த நாட்டிற்கு திரும்பிவிட்டு பேசலாம். அந்நிய நாட்டில் உட்கார்ந்துக்கொண்டு தலையும் தெரியாமல், வாழும் தெரியாமல் அறிக்கைகள் விடுவதை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.

கடந்த சில மாதங்களாகவே தனது அறிக்கைகளில் மக்கள் கூட்டணியின் மீது சேற்றை வாரி வீசும் வண்ணம் அறிக்கைகளை வேதமூர்த்தி வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கம்போங் புவா பாலா விவகாரத்தில் தனது அறிக்கை விடும் திறனை சற்று அதிகமாகவே உபயோகிக்கின்றார் வேதமூர்த்தி.

தனது
வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் சட்ட நுணுக்கங்கள் எல்லாம் பேசுகிறார். சட்ட நுணுக்கங்கள் பேசும் வேதமூர்த்தி அவர்களுக்கு, கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மீறும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இல்லை என்பது தெரியாதோ? இந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பற்றி தாங்கள் ஒரு வார்த்தையும் கூறாததன் மர்மம் என்ன? நில கையாக்க சட்டத்தை பயன்படுத்தி கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்துங்கள் என்று கூறும், தங்களுக்கு அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய 10லிருந்து 15 கோடி வெள்ளி வரை செல்லும் என்பது தெரியுமா? கடந்த வருடத்தில் பினாங்கு மாநிலத்தின் மொத்த வரவே ஏறக்குறைய 30 கோடி ரிங்கிட் என்பதாவது வேதமூர்த்திக்கு தெரியுமா? மொத்த வரவில் ஏறக்குறைய பெரும்பகுதியை ஒரு பகுதி நிலத்தை கையகப்படுத்த உபயோகித்து விட்டால், பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும், அமல்படுத்தப்படப்போகும் திட்டங்கள் பலவற்றை மாநில அரசு கைவிட வேண்டிய நிலை வரும். ஆண்டு தோறும் மாநிலத்தில் உள்ள 28 தமிழ்பள்ளிகளுக்கு வழங்கப்படும் 1.5 மில்லியன் ரிங்கிட் மான்யம், ஆலயங்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் வழங்கப்படும் மான்யம், 60 வயதைக்கடந்த முதியோர்களுக்கு வழங்கப்படப்போகும் சிறப்பு நிதி, கடுமையான ஏழ்மையை ஒழிக்க ஒதுக்கப்படும் மாநில அரசின் சிறப்பு நிதி என்று பல்வேறு மக்கள்நல திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவேதான், கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்று தவறு புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக்கிடம் இந்த நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசின் சார்பாக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தேசிய முன்னணி தலைவர் நிராகரித்தபொழுது, இந்த வேதமூர்த்தி ஏதும் பேசாமல் மௌனமாக இருந்ததின் அர்த்தம் என்ன? கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றது தேசிய முன்னணிதான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று, இருந்த பொழுதிலும் தேசிய முன்னணியை இந்த விவகாரத்தில் பொறுப்பேற்குமாறு யாருமே கூறவில்லை; குறிப்பாக வேதமூர்த்தி கூறவில்லை. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த பரவசி மாநாட்டில் கூட தேசிய முன்னணி மலேசிய இந்தியர்களை புறக்கணிக்கிறது என்று துண்டு அறிக்கைகள் எல்லாம் கொடுத்த வேதமூர்த்தி, இப்பொழுது வெட்ட வெளிச்சமாக தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை பலிகடா ஆக்கும் விதமாக அறிக்கை விடுவதின் மர்மம்தான் என்ன?

தனது அறிக்கைகளில் மாநில முதல்வரை இனவாதி என்றும், துணைமுதல்வரை மண்டோர் என்றும் கூறியிருக்கும் வேதமூர்த்தி யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று தெரிந்துக் கொள்ளலாமா? கடந்த சில வருடங்களாக இலண்டனில் வசித்து வரும் வேதமூர்த்தி, மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஏதுவாகத்தான் மக்கள் கூட்டணியை தாக்கும் படலம் தொடங்கியுள்ளதா என்பது அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியாகும்.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், வேதமூர்த்தி ஏதேதோ பேசி, அறிக்கைகள் விடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. களத்தில் இறங்கி நிலைமைகளை கண்டறிந்தவர்களுக்கே கம்போங் புவா பாலா பிரச்சனையின் உண்மை நிலவரம் புரியும். எதோ ஒரு அந்நிய தேசத்தில் ஒளிந்துக்கொண்டு அறிக்கை விடுவதால் எல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. புவா பாலா பிரச்சனையில் அந்த மக்களுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித்தர மாநில முதல்வரும், துணை முதல்வரும் எடுக்கும் முயற்சிகளைப் பற்றி, எதோ ஒரு மூலையில் அமர்ந்துக்கொண்டு சவடால் பேசும் வேதமூர்த்திக்கு தெரியாமலிருப்பது அதிசயமல்ல. தலையும் புரியாமல், வாளும் புரியாமல் உங்களைப்போன்ற சிலர், கம்போங் புவா பாலா பிரச்சனையில் மூக்கை நுழைத்து, அங்குள்ள மக்களை குழப்பிக் கொண்டிருப்பதால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதில் குழப்பம் நீடிக்கிறது. இப்பொழுது இறுதி தீர்வாக, கம்போங் புவா பாலா மக்கள் அவர்கள் வாழ்ந்த அந்த நிலத்திலேயே 5 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரட்டை மாடி வீடுகளை பெறும் ஒரு அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இறுதி தீர்வுத்திட்டத்தையும் சீர்குலைத்து பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க ஒரு தரப்பு வேலைகளை செய்து வருகின்றது. வேதமூர்த்தியின் அறிக்கைகளும் அந்த தரப்போடு ஒத்துப் போவதைப்போல அமைந்துள்ளதுதான் வியப்பாக உள்ளது.

இறுதியாக வேதமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தாங்கள் எந்த விவகாரத்திலும், எந்தவொரு கருத்தை சொல்ல விரும்பினாலும் மலேசியாவிற்கு வந்து கூறினால் சிறப்பாக இருக்கும். எது எப்படி இருப்பினும், நாம் பிறந்த மண் இதுதான், எதுவாக இருந்தாலும் இங்கிருந்து பேசுவதும், போராடுவதும்தான் ஒரு உண்மையான தமிழ் மகனுக்கு சிறப்பு. சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழனும் அதையே விரும்புவான். பிரபாகரன் என்ற மாவிரன் பிறந்த இனம் நம் தமிழினம்!! வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் தாய் மண்ணை விட்டு போக மாட்டேன் என்ற உறுதியோடு போராடிய அந்த மறத்தமிழனின் வழி வந்த தமிழ்ர்கள் நாங்கள். எங்கள் போராட்டம் எல்லாம் இந்த மண்ணில் தொடங்கி, இந்த மண்ணிலேயே முடியும். யாருக்கும் பயந்தோ, எதற்கும் அடிபணிந்தோ கோழைகளைப் போல் ஓடி ஒளியாமல் இங்கிருந்தே போராடுவோம். இதையெல்லாம் மறந்து விட்டு அந்நிய தேசத்தில் மறைந்துக்கொண்டு அறிக்கைவிடும் தங்களுக்கு பினாங்கு மாநில அரசைப் பற்றியோ, துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியைப் பற்றியோ பேசுவதற்கு அருகதைக் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியும் நீங்கள் தொடர்ந்து பேராசிரியர் அவர்களைப் பற்றியோ, பினாங்கு மாநில அரசைப் பற்றியோ சிறுமைப்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. மைக்கா ஹோல்டிங்க்ஸ் குளறுபடிகளுக்கு பிறகு பொருளாதார ரீதியாக மலேசிய தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இலண்டனில் பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போகிறோம், இந்த நாட்டு இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறோம் என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இஅய்க்கத்தின் முன்னோடிகள் ஐவர் கைது செய்யப்பட்டப் பிறகு, அந்த வழக்கை முன்னெடுப்பதாகக் கூறித்தானே மலேசிய தமிழர்கள் வாரிக்கொடுத்த இலட்சக்கணக்கான பணத்தோடு இலண்டன் சென்றீர்கள். அந்த வழக்கு என்ன ஆனது? இசா சட்டத்தின் கீழ் கைதாவதற்கு முன் அந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து முன்னேற்பாடுகளையும் முன் செய்த அந்த தலைவரிடமே கேட்போமா?

நீங்கள் மலேசியாவிற்குள் திரும்பகையில் கைதாகமால் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நேரடியாக அரசாங்கத்திடமோ, காவல்துறையுடனோ பேசுங்கள், அதை விடுத்து தேசிய முன்னணியை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் மக்கள் கூட்டணி மீது அவதூறுகளை கூறாதிர்கள். மக்களை குழப்பும் வண்ணம் இனியும் நீங்கள் அவதூறு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால் இப்பொழுது நான் வெளிக்கொனர்ந்திருப்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான், இதற்கு மேல் வெளிவரும் உண்மைகள்அதிரடியாக இருக்கும் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

இங்கனம்,

சத்திஸ் முனியாண்டி,
பினாங்கு மாநில துணை முதல்வர்
பேராசிரியர் இராமசாமி அவர்களின்
அரசியல் துறை அதிகாரி &
பினாங்கு மாநில ஜசெக சோசலிஸ்ட் இளைஞர் பகுதி
செயற்குழு உறுப்பினர்.

Thursday, June 11, 2009

தமிழீழத்தை நோக்கிய பயணம் - மலேசியத்தமிழர்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு!!


தமிழீழததை நோக்கிய தூரநோக்கு பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதராகவே இருப்பார்கள்.

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பாக தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தனிந்த நிலையில் இருப்பதுப்போன்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டதென்ற எண்ணம் ஏற்படக்கூடாது. தமிழினத்தின் தானைத்தலைவன் பிரபாகரனின் கனவு, இலட்சியம் எல்லாம் எப்பொழுதுமே தமிழீழ தாயகத்தை நோக்கியதாகவே இருந்துள்ளது; இனியும் அது அப்படியே தொடரும். போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம்; போராட்டம் ஓயாது என்பதை உலகத்தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும்.

தற்போதைய கால சூழ்நிலையில், உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழின பற்றாளர்களின் ஆதரவோடு வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க (Tamil Eelam Government in Exile) கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் உருவாக்கத்தில் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பானது இன்றியமையாததாக அமைய வேண்டும். தமிழீழ தேசத்தை நோக்கிய பயணமானது, அகிம்சை போராட்டத்தில் தொடங்கி ஆயுத போராட்டமாக உருவெடுத்தது. ஆயுத போராட்டத்திலிருந்து தற்பொழுது இராஜதந்திர நகர்வுகளை நோக்கிய போராட்டமாக மாறுதல் காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதால், தமிழீழ தாயகத்தை நோக்கிய புலிகளின் ஆயுத போராட்டம் ஓய்ந்து விட்டது என்றும், தமிழர்களின் சுய நிர்ணய கோரிக்கைகள் அடக்கப்பட்டுவிட்டன என்பன போன்ற தவறான கண்ணோட்டங்கள் ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழீழ தேசத்தை நோக்கிய பயணம் எப்பொழுதும் இல்லா வண்ணம் ஒரு புதிய பரிணாமத்தில் பயனிக்கப்போகின்றது. ஆயுதப்போராட்டமும், அமைதிப்போராட்டமும் இணைந்த, இராஜதந்திர நகர்வுகள் நிறைந்த ஒரு புதிய போராட்ட பரிணாமம் ஒன்று தலையெடுக்கப்போகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழீழ சுதந்திர போராட்டம், உலக அங்கீகாரத்தை நோக்கி செயலபட வேண்டியது மிக அவசியம். உலக அங்கீகாரத்தை நோக்கி நாம் செல்லும் இந்த காலக்கட்டத்தில், புலம்பெயர் தமிழர்கள், தமிழீழ அரசாங்கத்திற்கு ஒரு வலுவான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி, காரியங்களை செவ்வனே செயல்படுத்தி நமது தலைவனின் இலட்சிய கனவை நினைவாக்குவோம்.

கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டங்களில் வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்க கட்டமைப்பு (Government In Exile) மிக முக்கிய பங்காற்றியுள்ளதை அந்தந்த போராட்டங்களை உற்று நோக்கினால் காணமுடியும். ஆச்சே விடுதலைப்போராட்ட இயக்கமான (GAM) ஸ்வீடனிலிருந்து தனது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்ததை இவ்வேளையில் மிகச்சிறந்த உதாரணமாகக் கூறலாம். அதே போன்ற ஓர் கட்டமைப்பை ஏற்படுத்திதான் கிழக்கு தீமோர் சுதந்திர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துலக அங்கீகாரத்தை பெறுவதில் இது போன்ற வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்க கட்டமைப்புகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. தீபெத்தின் ஆன்மிக தலைவர் தாலாய் லாமா முன்னெடுத்த தீபெத் அங்கீகார போராட்டம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது அனைவரும் அறிந்த உண்மை.

தற்போதைய உள்ள காலக்கட்டத்திலும், தமிழீழ சுதந்திர போராட்டத்தை நோக்கிய பயணம் தமிழர்களுக்கு சாதகமாகவே உள்ளது. இனி வரும் காலக்கட்டங்களில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்தின் வழிமுறைகள்தான் தமிழீழ தேசிய கனவை நனவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பின் மூலம், உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலமும், மனித உரிமை விவாதங்களினூடாகவும், தமிழீழ தேசம் அமைய வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதில் மிக முக்கிய பங்காற்ற முடியும். கடந்த காலங்களில், ஒரு சுதந்திர தேசத்திற்கான அனைத்து அத்தியாவசியங்களையும் உள்ளடக்கி, தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ், கிளிநொச்சியை மையமாக கொண்ட தமிழீழ தேசம் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். ஆகவே, தனி தேசத்தை கட்டியெழுப்பி, ஆளும் தகுதிகள் அனைத்தும் தமிழர்களுக்கு உள்ளது என்பதை தலைவர் நிருபித்துள்ளார்.

இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழர்களின் வாழ்வாதர உரிமைகளை முன்னிறுத்தி, தங்களின் பிறந்த மண்ணில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று ஈழத்தமிழர்கள் கௌரவமான வாழ்க்கை வாழ, தமிழீழ தேசம் மட்டுமே தீர்வாக அமையும். இலங்கையின் வட-கிழக்கில் தமிழீழம் அமைக்க, வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியம். அவ்வாறு அமைக்கப்படும் தமிழீழ அரசாங்கத்திற்கு, அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும்,ஆதரவையும் வழங்க வேண்டிய கடப்பாடு உலகத்தமிழர்களுக்கு உள்ளது. கண்டிப்பாக மலேசிய தமிழர்கள், தமிழீழ தேசியத்திற்கான போராட்டத்திற்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பார்கள் என்பதை இவ்வேளையில் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்.

Tuesday, June 9, 2009

தமிழினத்திற்கு எவ்வகையிலும் உதவாதோரெல்லாம், தமிழ் பத்திரிகைகளின் மீது சேற்றை வாரி வீசுவதா??


வெளியுறவுத்துறை துணையமைச்சராக இருக்கும் கெராக்கானின் கோகிலன், தமிழ் பத்திரிகைகளால் இந்திய சமுதாயத்திற்கு பயன் இல்லை என்று கூறியதாக வந்திருக்கும் பத்திரிக்கை செய்தியைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்நாட்டு தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் பத்திரிக்கைகளின் மீது சேற்றை வாரி வீசும் துணையமைச்சர் கோகிலனுக்கு கடுமையான கண்டனத்தை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் பத்திரிக்கைகள் என்றால் எவ்வலவு வேண்டுமானாலும் எகத்தாளம் பேசலாம் என்ற நினைப்பில் கோகிலன் மிதக்கிறார் போலும். இதே போன்ற அவதூறான கூற்றுகளை சீன பத்திரிக்கைகளின் மீதோ, மலாய் பத்திரிக்கைகளின் மீதோ கூறுவதற்கு கோகிலனுக்கு தைரியம் இருக்கிறதா? சீன பத்திரிக்கைகளை பற்றி இவ்வாறு கோகிலன் கூறியிருந்தால், அவரின் சொந்த கட்சியிலேயே விரட்டியடித்து விட்டிருப்பார்கள். தமிழர்களும், தமிழ் பத்திரிக்கைகளும் இந்த கோகிலன் போன்றோருக்கு கிள்ளுக்கீரை என்ற நினைப்புப்போலும்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ் பள்ளிகளையெல்லாம் மூடி விட வேண்டும் என்று கூறிய ஓர் அரசியல்வாதிக்கும், இந்த கோகிலனுக்கும் எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. தமிழை வாழவைக்கும் தமிழ்பள்ளிகளின் மீதும், தமிழ்பத்திரிக்கைகளின் மீதும் சில கருங்காலிகள் குறியாக இருப்பது ஏனென்றுதான் நமக்கு புரியவில்லை.

இந்த நாட்டு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் தமிழ் பத்திரிக்கைகளின் பங்கு என்ன என்பதை யாவரும் அறிவர். நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ் பத்திரிக்கைகள் எதற்கும் உதவாதவை என்பதைப் போன்ற அறிக்கை வெளியிட்டுள்ள கோகிலன் ஒரு விவரமாறியாத அரசியல்வாதி என்றுதான் கூற முடியும். இந்த கோகிலன் உள்ள இடம் அப்படி; மரத்துக்கு பின்னால் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்றும் “புகழ்ந்த” தலைவர்கள் வந்த கட்சியில் அல்லவா உறுப்பினராக உள்ளார்; இவர் தமிழ் பற்றாளராகவும், உண்மை தமிழராகவும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது அறியாமையை குறிப்பதாகவே இருக்கும்.

மருந்துக்கும் தமிழர்களின் நலன்களைப் பற்றி பேசியில்லாத கோகிலன் போன்றோரெல்லாம் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் எமது சகோதரர்கள் படும் துன்பங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருப்பதே தமிழ் பத்திரிக்கைகள்தான். வெளியுறவுத்துறையில் அமர்ந்துக்கொண்டிருக்கும் கோகிலன், ஈழத்தமிழர்களின் இன்னல்களைப் பற்றி அவரின் அமைச்சரிடம் எப்பொழுதாவது வாய்த்திறந்திருப்பாரா? அவ்வாறு வாய்த்திறந்திருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக மலேசியா நடந்துக் கொண்டிருக்குமா?உலகத்தமிழர்களையெல்லாம் கவலைக்குள்ளாக்கியிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி மறந்தும் பேசியில்லாத இந்த கோகிலன் உண்மையில் தமிழன்தானா என்ற சந்தேகமும் வருகின்றது.

தமிழ் பத்திரிக்கைகளை பழிப்பது தமிழை பழிப்பதற்கு சமம்; தமிழை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம் என்பதை கோகிலன் உணர வேண்டும். இந்தியர் என்ற அடைமொழியை சுமந்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த கோகிலனால், மலேசியத் தமிழர்களின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ள முடியாததால் உடனடியாக பதவி விலக வேண்டும். அதேவேளையில் கோகிலன் தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். கோகிலன் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பி அவரை மன்னிப்புக்கேட்குமாறு வலியுறுத்துவேன்.

பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்

Saturday, May 30, 2009

ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி


ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி

பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது. புலிகளை வென்று விட்டதாக கூறி வெறறு மாயையை நம்பி கும்மாளமடிக்கும் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள "பிரபாகரனின் உடல்" படங்கள் முற்றிலும் கேலிக்குரியது, கோமாளித்தனமானது. கடந்த மே 18-ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனையும் மற்றும் பல முக்கிய தளபதிகளையும் வெற்றிகரமாக கொன்று விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின், புலிகளின் அனைத்துலக செய்தித்தொடர்பாளர் க.பத்மநாபன், புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17-ஆம் தேதி நடந்த சமரில் வீரமரணம் அடைந்ததாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் தெரியும் முரண்பாடுகளை காணும்போது இந்த செய்திகளெல்லாம் வெறும் வதந்திகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதன் மூலம் புலிகளின் இயக்கத்தை உடைக்க இலங்கை இராணுவம் செய்யும் சதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. புலிப்போராளிகளை உளவியல் மூலமாக பலவீனப்படுத்தும் அதே வேளை, அனைத்துலக நாடுகளிடம் இருந்து தமிழர் பகுதிகளில் மீழ்கட்டமைப்பு என்ற சாக்கில் பொருளுதவிகளை பெறுவதற்காகவும், இலங்கை இனவெறி அரசு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் திண்ணம். அதே வேளையில், தலைவர் பிரபாகரன் உடல் என்று கூறி சிங்கள இராணுவம் காட்டும் உடல் பிரபாகரனுடையுதுதானா என்ற சந்தேகமும் உலகத்தமிழர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. கண்டிப்பாக அது பிராபகரனுடைய உடலாக இருக்காது என்பதுதான் அனைவரது நம்பிக்கையும் கூட.


புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனின் அறிக்கையும், உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள இராணுவம் பிரபாகரன் மரணம் என்று அறிவித்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு பத்மநாபனின் அறிக்கை வெளிவந்துள்ளது மிகப்பெரும் முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் புலிகள் எப்பொழுதுமே தங்களது போராளிகளின் வீரமரணத்தை பற்றிய அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பின்புதான் க.பத்மநாபன் அறிவிக்கிறார், புலிகளின் தலைவரும், தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள் என்று. இந்த ஒரு முரண்பாடே, உலக தமிழர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தி விட்டது. அப்படி, தலைவரும் அவர்தம் குடும்பத்தினரும், மூத்த தளபதிகளும் உண்மையிலேயே வீரமரணம் அடைந்திருப்பார்கள் என்றால், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களின் உடல்கள் எங்கே?

பெரும்பாலானோர் நம்புவதைப் போல் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுமார் 300 போரளிகளோடு, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் இருக்கும் போதே போர் சூன்ய பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறான செய்திகளில் களத்திலிருக்கும் போரளிகளிடமிருந்து வருவதால், இந்த செய்திகள் உண்மையாகவே இருக்கக்கூடும். தமிழகத்தலைவர்கள் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். தலைவர் பிரபாகரன் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் மிக அழுத்தமாக கூறுகின்றனர். அதுதான் உண்மை என்று நாமும் நம்புவோம். தலைவர் பிரபாகரன் அவர்கள், 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை, உலகத்தமிழர்களின் மத்தியில் மிக ஆழமாக வேருன்றியுள்ளது. 5-ஆம் கட்ட ஈழப்போருக்கான ஏற்பாடுகளை தலைவர் முன்னெடுத்து, தானே இம்முறையும் போரை முன்னின்று நடத்துவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பை பற்றிய கேள்விகளும் எழவே செய்கிறது. பிரபாகரனைப் பற்றிய கே.பத்மநாபனின் அறிவிப்பிற்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று உலகத்தமிழர்கள் மத்தியில் பலமான சந்தேகம் இருக்கவே செய்கிறது. இலங்கை இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் மேல் தொடுத்த மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை இந்தியாதான் முழுமூச்சாக ஆதரித்தது என்பதை உலக்த்தமிழர்கள் அறிவார்கள். ஈழப்போரை, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தியா ஆக்கிவிட்டிருந்தது என்பது தெள்ளத்தெளிவான விடயம். புலிகள் 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவார்கள் என்பதும் இந்தியாவிற்கும் தெரியும், ஆகவே புலிகள் வைத்துக்கொண்டு சிங்களவர்க்கும் தமிழர்களுக்கும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதை இந்தியா விருமபவில்லை. ஆகவே, அவசர,அவசரமாக புலிகள் தலைமை அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் அல்லாத தமிழர்களான டக்ளஸ் தேவனந்தா, ஆனந்த சிவசங்கரி ஆகியோரை முன்னிறுத்தி ஓர் சமரச உடன்படிக்கை அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த விரும்பியிருக்கக்கூடும். இந்தியாவின் இந்த இராசத்தந்திர சதியில் க.பத்மநாபனும் விழுந்து விட்டாரா என்ற கேள்வி பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களிடம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. புலிகளை தமிழர்களின் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ளாத இந்தியா, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழமக்களின் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேசுவதற்கு மறுப்பது ஏன் என்ற வினா உலகத்தமிழர்களின் ஒட்டு மொத்த கேள்வியாகும். ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகத்தான் எந்தவொரு அதிகாரப்பகிர்வு யோசனையும் முன்னெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே ஈழத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத டக்ளஸ் தேவனந்தாவுடனோ, ஆனந்த சிவசங்கரியுடனோ, அல்லது துரோகி கருணாவோடோ எந்தவொரு பேச்சுகளும் நடைப்பெறக்கூடாது என்பதுதான் புலம்பெயந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் கருத்தும் கூட.


இறுதியாக, பிரபாகரன் என்ற மாவீரன் பற்றி வரும் செய்திகளில், பல செய்திகள் வெறும் வதந்திகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இப்பொழுது இருப்பதை விட பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்தது தமிழீழப் போராட்டம். அவ்வாறான பல்வேறான இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் கடந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன். ஆகவே, இப்பொழுது நிகழும் இந்த குழப்பமிகுந்த சூழ்நிலையையும் கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் பிரபாகரன் முன்னெடுப்பார் என்று தாராளமாக உலக்த்தமிழர்கள் ந்ம்பலாம். மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன். பிரபாகரனுக்கு மரணமே கிடையாது; என்றென்றும் தமிழர்களின் மனதிலெல்லாம் அவர் வாழ்ந்துக்கொண்டுதானிருப்பார். பூமிப்பந்தில் தமிழர் என்ற இனம் உள்ளவரை பிரபாகரனின் புகழை சரித்திரங்கள் பாடும். ஆகவே, உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக மலேசியத்தமிழர்களான நாம், ஈழத்தமிழர்களுக்கு நம்மால் ஆன உதவிகளயெல்லாம் செய்து, அவர்களின் வாழ்வுரிமை போராட்டம் வெற்றிப்பெற உறுதுணையாக இருப்போமாக.


பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்,
மலேசியா

Thursday, May 28, 2009

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு....

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்!! இலங்கை தூதருக்கு பேராசிரியர் இராமசாமி எச்சரிக்கை!!

இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரை கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுப்போல் உள்ளது.


மலேசியத்தமிழர்கள் பொதுவாகவே தங்களது ஈழத்து சகோதரர்கள் மீது அளவிலா அன்பும், பற்றும் கொண்டுள்ளவர்கள். தங்களது இன சகோதரர்கள் ஈழத்தில் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கொலைவெறிப் போரில் சிக்கித் தவிப்பதைக் கண்டு, மனம் வெதும்பி அமைதியான முறையில் நடத்தும் கண்டனக் கூட்டங்களை ஏளனம் செய்வதைப்போல் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கை தூதரின் பேச்சை நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனிமேல் இதுப்போன்ற முட்டாள் தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் சொல்லென்னா துயரைக் கண்டு மனம் வெதும்பிகிடக்கும் எங்களை, மலேசியாவில் உள்ள சிங்கள காடையர் அரசின் பிரதிநிதிகள் வீணே சீண்டி பார்க்கவேண்டாம். நாங்கள் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளமையால் யாரும் எங்களை வீணே சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இந்நாட்டு தமிழர்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல என்பதை தமிழினத்தின் எதிரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகளை வென்று விட்டோம் என்ற வெற்று மாயையில் உழ்ன்றுக்கொண்டிருக்கும் இந்த சிங்கள காடையர் பிரதிநிதிகளின் பேச்சுகள் எல்லாம், நாங்கள் எங்கள் ஈழத் தமிழ் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பை சிதைத்து விடாது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றுமே எமது ஈழத்தமிழ் உறவுகளை மறந்து விடமாட்டோம். ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று தங்கள் மண்ணில் சுதந்திரத்தோடு வாழ மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.




பினாங்கு மாநில துணை முதல்வர்,
பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி

Tuesday, May 26, 2009

மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.



மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.


இலங்கை இனவெறி அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை அரசு கொண்டு வரும் எந்தவொரு தீர்மானத்தையும் ஆதரிக்கக்கூடாது என்பது மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இலங்கையில் நடந்துக்கொண்டிருக்கும் மனித பேரவலங்களை கண்டும் காணாமல் போலிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதை மலேசிய அரசு உணர வேண்டும். மலேசிய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் மலேசிய அரசுக்கு அதனை எடுத்துக்கூற வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் தீர்மானத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாடானது, மலேசியாவில் வாழும் தமிழர்களின் மனதை பெரிதும் பாதித்துள்ளது. பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை கடுமையாக எதிர்க்கும் மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை கண்டும் காணாதது போல் இலங்கையின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது மலேசிய தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் செயலாகும். இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகளை கண்டிக்கும் மலேசியா, இலங்கை நடத்தும் படுகொலைகளை ஆதரிப்பது போல் நடந்துக்கொள்வதை எந்தவொரு மலேசிய தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும், அல்லது மலேசிய வெளியுறவு துணையமைச்சராக இருக்கும் தமிழராவது அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இலங்கையை ஆதரிக்கும் மலேசியாவின் நிலையானது, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதற்கு சமமே. இனப்படுகொலைகளை புரிந்து மனித பேரவலத்தை ஏற்படுத்தும் இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை எந்தவொரு நாடும் ஆதரிக்கக்கூடாது. இஸ்ரேலை எதிர்க்கும் மலேசியா, இலங்கையை ஆதரிப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது. மனிதபிமான விவகாரங்களில் ஒரே நிலைபாட்டோடு மலேசியா செயல்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் இருவேறு கொள்கைகளை கையாள்வது மலேசியாவின் மனிதநேய நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும்.

விடுதலைப்புலிகளோடு போரிடுகிறோம் என்ற சாக்கில், இலங்கையின் வட-கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள மகிந்த இராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கியுள்ளது. போரின்போது இடம்பெயர்ந்தோரை தற்காலிக முகாம்களில் அடைத்து வைத்து பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஸ்ரீ லங்கா அரசின் போக்குகளை உலக நாடுகள் கண்டிப்பாக கண்டித்தே ஆக வேண்டும். மலேசிய அரசாங்கம் உண்மையிலேயே மனிதநேயத்தை மதிக்கும் அரசு என்றால் இலங்கை அரசாங்கத்தின் கொடும் செயல்களை கண்டிக்கத் தவறக்கூடாது. இலங்கை அரசானது, இடம்பெயர்ந்த தமிழ்ர்கள் எந்தவொரு துன்பமும் அனுபவிக்காமல் நலமாகவே உள்ளனர் என்பது போன்ற நாடகம் ஆடுகின்றது. இலங்கை அரசின் இந்த நாடகத்திற்கு உலக நாடுகள், குறிப்பாக மலேசியா உடந்தையாக இருக்கக்கூடாது என்பதுதான் ஒட்டு மொத்த மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ர்களின் நிலையைக் கண்டு, ஐநா செயலாளர் பாண் கின் மூன் கூட அதிர்ச்சியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் மனிதநேயத்தை மதிக்கும் உலக நாடுகள் கட்டாயமாக இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமெரிக்கவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதற்கான முயற்சிகளில் உடனே இறங்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் புரிந்த கொடுமைகளைவிட மிகக்கொடிய போர் குற்றங்களைப் புரிந்துக்கொண்டிருக்கும் மகிந்த இரஜபாக்சே, அவர் சகோதரர் கோதபாய இராஜபக்சே, மற்றும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் தளபதிகள் ஆகியோரை போர் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அவர்கள் ஏற்படுத்திய மனித பேரவலத்துக்கு தக்க தண்டனை வாங்கித்தரப்படவேண்டும். மனிதநேயத்தை மதிக்கும் நாடுகள் இவ்வாறான தீர்மானத்தை முன்மொழியும்பொழுது, மலேசிய அரசு தனது தார்மீக ஆதரவை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, டத்தோஸ்ரீ (துன்) அப்துல்லா படாவி பிரதமராக இருந்த காலத்தில், காசா முனையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து கூட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தில், இலங்கை விவகாரத்தையும் நாம் விவாதிக்க வேண்டும்; அங்கு நடக்கும் படுகொலைகளை தடுத்துநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இராயிஸ் யாத்திம், இலங்கை பிரச்சனையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க முனையவிருப்பதாகவும் கூறியிருந்தார். அப்துல்லா படாவி சென்று, நஜீப் துன் ரசாக்கும் வந்தாகிவிட்டது. இராயிஸ் யாத்திம் முடிந்து, அனிபா அமான் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் ஆகி விட்டார். ஆனால், இலங்கை விவகாரத்தைப் பற்றி மலேசிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது, மலேசிய தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயத்தை மதிக்கும் நாடு என்ற வகையிலும், மனித உயிர்களின் மீது அக்கறை கொண்ட நாடு என்ற முறையிலும், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை முன்மொழியும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது. இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் மன ஓட்டத்தை மலேசிய அரசு மதித்து நடக்க வேண்டும். ஜனநாயக நாடான மலேசியா, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள், சம உரிமை பெற்று சுய கௌரவத்தோடு வாழ நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முனைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

Wednesday, April 1, 2009

வாய்சவடால் வீரன் சாமிவேலு

பேராசிரியர் இராமசாமி ஆசிரியர் வேலை செய்யும் போது நல்லதை பேசியதே கிடையாது என்று சாமிவேலு கூறியிருப்பதற்கு எம்முடைய பதில் :-

ஆசிரியர் வேலை செய்யும் போது மட்டுமல்ல, எப்பொழுதுமே நான் நல்லதையே நினைப்பேன், நல்லதையே சொல்வேன், நல்லதையே செய்வேன். கடந்த 30 வருடமாக சாமிவேலுவின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகா என்ன நல்ல காரியத்தை செய்துவிட்டது, மஇகாவைப் பற்றி நல்லதாய் சொல்ல?? இந்நாட்டு இந்திய சமுகத்திற்கு சிறந்த சேவையாற்றும் தனி நபர்களுக்கும், பொது இயக்கங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க நான் ஒருபோதும் தயங்குவது இல்லை. அதே வேளை, இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு துரோகத்தை மட்டுமே செய்துள்ள இயக்கங்களுக்கு சமாதி கட்டுவதில் இருந்தும் நான் பின்வாங்கப்போவதில்லை. இந்த சமுதாயத்தின் துரோகிகளுக்கு சமாதி கட்ட நான்தான் பொருத்தமானவர் என்று சாமிவேலுவே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், 30 வருடங்களாக மலேசிய இந்திய சமுதாயத்தின் இன்னல்களுக்கு பல விதங்களில் காரணமாய் உள்ள மஇகாவிற்கு நான் சமாதி கட்ட தேவையில்லை, எதிர்வரும் புக்கிட் செலாம்பாவ் இடைத்தேர்தலில் புக்கிட் செலாம்பாவ் மக்களே சமாதி கட்டுவார்கள்.

சாமிவேலுவின் தனிப்பட்ட கருத்தை அவர் கூறியிருக்கலாம், ஆனால் நான் கூறியது இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் கருத்து. உண்மை பல நேரங்களில் கசக்கும் என்று கூறுவார்கள், சாமிவேலுவின் விசயத்தில் அக்கூற்று எவ்வளவு உண்மை என்று இப்போது தெரிகிறது. 52 ஆண்டுகளில் மலேசிய இந்திய சமுதாயம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம். அதுவும் சாமிவேலுவின் தலைமையின் கீழான கடந்த 28 வருடங்கள் மலேசிய இந்தியர்களின் வாழ்வின் இருண்ட பாகம் என்று கூறலாம். கடந்த 28 வருடங்களில் இந்நாட்டில் மஇகா என்னவெல்லாம் சாதித்தது? எத்தனை இந்திய மாணவர்களுக்கு அரசாங்கத்தின் பொதுசேவைத் துறையின் உபகாரச்சம்பளம் தரப்பட்டது?? எத்தனை தகுதியுள்ள இந்தியர்களுக்கு பொதுசேவைத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது?? பொதுசேவையில் உள்ள எத்தனை இந்தியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது?? அங்கொன்றும், இங்கொன்றும் என்று இந்தியர்கள் கிள்ளுக்கீரைப் போல் நடத்துப்பட்டது சாமிவேலுவின் காலத்தில்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சாமிவேலுவின் காலத்தில்தான் இந்நாட்டு இந்தியர்கள் அதிகம் ஏமாற்றப்பட்டனர், நிறைய உரிமைகளை இழந்தனர்.

சாமிவேலு, தனது தலைமை காலத்தில் செய்த சாதனையெல்லாம் இந்நாட்டு இந்தியர்களை ஏமாற்றியது மட்டுமே. சாமிவேலு பெரும் ஆரவாரத்தோடு அறிவித்த திட்டங்களெல்லாம் இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றங்களாகவே மிஞ்சியுள்ளன என்பது நாடறிந்த உண்மை. இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறேன், கிழிக்கப்போகிறேன் என்று அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் இன்றைய நிலை என்னவென்று ஊருக்கே தெரியும். மைக்கா ஹோல்டிங்சோடு சாமிவேலுவின் சாதனை நின்று விட்டதா என்றால் இல்லை; இந்நாட்டு ஏழை இந்தியர்கள் இனிமேல் இந்நாட்டிலேயெ குறைந்த விலையில் மருத்துவம் படிக்கலாம், வெளிநாட்டில் சென்றுதான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தில் எத்தனை ஏழை இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்?? யூக்ரேன், ரஷ்யாவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தைவிட குறைந்த விலையில் பல இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள் என்பதுதான் நடப்பு உண்மை. இதுதான் சாமிவேலு கூறிய ஏழை இந்திய சமுதாயத்தின் பல்கலைக்கழகமா??

சாமிவேலுவின் சாதனை பட்டியல் அதோடு நின்றுவிடவில்லை, டாக்சி உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு, கேபிஜே கூட்டுறவு விவகாரம், எம்ஐஇடி நிதி முறைகேடு என்று நீண்டுகொண்டே போகிறது. மலேசிய தமிழர்கள்தான் ஏமாற்றப்பட்டார்கள் என்றால், இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கென்று சேகரிக்கப்பட்ட நிதியும் அவர்களிடத்தில் போய் சேரவில்லையாம். வாழ்வா, சாவா என்று போரோடு போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் வயிற்றிலும் அடிக்கலாமா?? இது நியாயமா?? இதையெல்லாம் கேட்டால் என் மீது பாய்கிறார் சாமிவேலு. மஇகா அதை செய்தது, இதை செய்தது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

மஇகாவின் தலைமையில் இந்நாட்டில் நடந்துள்ள, நடந்துக்கொண்டிருக்கின்ற ஊழல்களுக்கு சாமிவேலு பதில் கூறியே ஆக வேண்டும். நான் கேட்பதற்கெல்லாம் பதில் கூறாமல், சாமிவேலு என்னைப் பற்றி வீண் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பினாங்கு மாநிலத்தில் அடியோடு சாய்க்கப்பட்டது மஇகா; பினாங்கில் உங்கள் கட்சி எதையுமே சாதிக்காததால்தான் இந்த நிலை. உங்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பி விரக்தியின் உச்சிக்கு சென்றதால்தான், கடந்த பொதுத்தேர்தலில் உங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். பினாங்கு மாநிலத்தில் உங்கள் கட்சிக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாத நிலையில் என்னைப் பற்றி கேள்வியெழுப்ப நீங்கள் யார்??

மீண்டும் அழைக்கிறேன்; பகிரங்கமாக!! உங்கள் பக்கம் உண்மையிருந்தால், பொதுமேடைக்கு தைரியமாக வரலாம். இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்று பொது மேடையில் நேருக்கு நேர் நின்று விவாதிப்போம். அதற்கு நீர் தயாரென்றால், சொல்லுங்கள்; எங்கே??என்று??எப்போது?? அதை விடுத்து இராமசாமி அப்படி, இராமசாமி இப்படி என்றெல்லாம் வீண் பேச்சும், வெட்டி அறிக்கைகளும் வேண்டாம். தேர்தலில் வென்றால் அதை செய்வேன், இதை செய்வேன் என்ற உங்களின் வெற்று வாக்குறுதியை நம்பி புக்கிட் செலாம்பாவ் வாக்காளர்கள் ஏமாந்து போவார்கள் என்று பகல்கனவு காண வேண்டாம். உங்களையும், மஇகாவையும் நம்பி இந்த சமுதாயம் நிறைய ஏமாந்துவிட்டது, இனியும் ஏமாறுவார்கள் என்று எண்ண வேண்டாம். நீங்கள் வாய்சொல்லில்தான் வீரன் என்பதை இந்நாட்டின் இந்திய சமுதாயம் உணர்ந்து வெகு நாளாகின்றது.

இதனை சவாலாக எடுத்துக்கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் சரி, மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன், உண்மை உமது பக்கம் இருந்தால் பொது மேடையில் சந்திக்க வாருங்கள், அதை விடுத்து புக்கிட் செலாம்பாவை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்துக்கொண்டு அறிக்கை விட வேண்டாம்.

பினாங்கு மாநில துணை முதல்வர்,
பேராசிரியர் இராமசாமி.

Wednesday, January 14, 2009

Save Sri Lankan Tamils from Genocides - Deputy CM in Malaysian Parliament

Penang State Deputy Chief Minister, Batu Kawan constituency member of Parliament, Professor Dr.P. Ramasamy pleaded with the Malaysian government immediately organize a special meeting to pass a resolution to save the Sri Lankan Tamils. Professor Dr.P. Ramasamy said that, Malaysian government enacted special resolution the save the Palestine from the Israel attacks. It is important our government also do the same with Eelam Tamils as they are facing similar situation from the Sri Lankan aggressor.

Over 320,000 Tamil people are in dire need of assistance in the northern (Vanni) areas of Sri Lanka due to the bloody and brutal military operations against its own Tamil citizens. This situation have gone to the worst catastrophic humanitarian tragedy as Sri Lankan forces indiscriminately shelling and bombing them. From the beginning of this year alone, 28 civilians were killed and over 185 injured so far.
(Courtesy of www.tamileelamnews.com)

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.
பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத் தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களைச் சிங்கள தமிழ் மக்களைச் சிங்கள அரசு வானூர்தி மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கை தமிழ் மக்களையும் அழிவில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.
அனைததுலக கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி மிக வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார்.

சிங்கள அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் படும் துயரங்களைப் பற்றி பேசி அதற்குத் தீர்வு காண பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

(Courtesy of : www.puthinam.com)