Wednesday, January 14, 2009

Save Sri Lankan Tamils from Genocides - Deputy CM in Malaysian Parliament

Penang State Deputy Chief Minister, Batu Kawan constituency member of Parliament, Professor Dr.P. Ramasamy pleaded with the Malaysian government immediately organize a special meeting to pass a resolution to save the Sri Lankan Tamils. Professor Dr.P. Ramasamy said that, Malaysian government enacted special resolution the save the Palestine from the Israel attacks. It is important our government also do the same with Eelam Tamils as they are facing similar situation from the Sri Lankan aggressor.

Over 320,000 Tamil people are in dire need of assistance in the northern (Vanni) areas of Sri Lanka due to the bloody and brutal military operations against its own Tamil citizens. This situation have gone to the worst catastrophic humanitarian tragedy as Sri Lankan forces indiscriminately shelling and bombing them. From the beginning of this year alone, 28 civilians were killed and over 185 injured so far.
(Courtesy of www.tamileelamnews.com)

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.
பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத் தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களைச் சிங்கள தமிழ் மக்களைச் சிங்கள அரசு வானூர்தி மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கை தமிழ் மக்களையும் அழிவில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.
அனைததுலக கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி மிக வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார்.

சிங்கள அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் படும் துயரங்களைப் பற்றி பேசி அதற்குத் தீர்வு காண பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

(Courtesy of : www.puthinam.com)